Thursday, September 09, 2010

ஏன் என்று புரியாத ஈர்ப்பு இந்த வார்த்தைகளில்...

காற்றில்லாத குமிழிக்குள்
அமர்ந்திருக்கிறேன்.
உலகிலிருந்து துண்டிக்கப்பட்ட
பிரக்ஞையின்றி கழிகிறதென் பொழுதுகள்.
எதிர்பார்ப்பின் அர்த்தங்களும்
காத்திருப்பின் அபத்தங்களும்
சிறு சிறு முட்களாய் உடலை கிழிக்கின்றன.
குருதி நதியென ஓடுகையில்
எனக்கான காற்றை
சுமந்து வருகிறாய்.
தொலைவில்,
வெக்கையில் கருகிய பூச்செடியில்
விழுந்து விம்முகிறது
முதல் மழைத்துளி.